வட கொழும்பு அரச தொடர்மாடி வீடுகளின் விண்ணப்ப படிவங்கள் இன்று வழங்கப்படும்!!
வாடகை வீடுகளில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு நிரந்தர தொடர்மாடி வீடுகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் தொலைத்தொடர்புகள், தகவல் தொழில்நுட்பவியல் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
வட கொழும்பு அபிவிருத்தி குழு தலைவர் என்ற முறையில் நகர அபிவிருத்தி சபையின் செயலாளரும் பாதுகாப்பு செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில் வாடகை வீடுகளில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு நிரந்தர தொடர்மாடி வீடுகளை குறைந்த முற்பணத்துடன் 25 வருட கால தவணை முறையில் பெற்றுக் கொள்ளக்கூடிய விண்ணப்பப் படிவங்களை இன்று முதல் கட்டமாக மட்டக்குளிய சென்.ஜோன்ஸ் மகா வித்தியாலயத்தில் மாலை 6 மணிக்கு விநியோகிக்க முடிவு செய்துள்ளேன்.
நான் எங்கே நிற்கின்றேன் என்பது முக்கியமல்ல. யாருக்காக நிற்கின்றேன் என்பதுதான் முக்கியம். எமது மக்களுக்கு தேவையானவற்றை பெற்றுக் கொள்வதற்காகத்தான் அரசாங்கத்துடன் நிற்கின்றேன்.
கடந்த ஐந்து வருட பாராளுமன்ற கால கட்டத்தில் கொழும்பு மாவட்ட தமிழ் பாடசாலைகளை ஏறைக்குறைய 20 வருட காலத்திற்கு மேல் தேவைப்பட்ட அபிவிருத்தியை செய்து காட்டியுள்ளேன்.
அடுத்த கட்டமாக தலைநகரில் வாடகை வீட்டில் விசிக்கும் தமிழ் மக்களின் சொந்த வீட்டுப் பிரச்சினையை தீர்ப்பதற்கான செயல்திட்டங்களில் இறங்கியுள்ளேன்.
இதனையும் தீர்த்து வைப்பேன். இதனையும் நான் ஜனதிபதி தேர்தலுக்கு முன்பாக செய்து காட்டுவேன். இதனை மக்கள் புரிந்து கொண்டு செய்ல்பட வேண்டும் என்று எதிர்ப்பார்க்கின்றேன்.
Average Rating