எம்பிலிபிட்டி பிரதேச சபை உறுப்பினர்கள் பிணையில் விடுதலை!!
Read Time:1 Minute, 0 Second
எம்பிலிபிட்டி பிரதேச சபை உப தலைவர் தவிர்ந்த ஏனைய உறுப்பினர்கள் இன்று (10) எம்பிலிபிட்டி நீதிமன்றில் ஆஜராகியுள்ளனர்.
பிரதேச அபிவிருத்தி ஒன்று தொடர்பில் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு ஒன்றை அடுத்து இவர்கள் நீதிமன்றில் ஆஜராகினர்.
சுற்று வேலி, நுழைவாயில், காண் ஆகியவற்றை உடைத்ததாக நபர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.
நீதிமன்றில் ஆஜரான உறுப்பினர்கள் ஒரு லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டதோடு வழக்கு விசாரணை டிசம்பர் 15ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எம்பிலிபிட்டி பிரதேச சபை உப தலைவர் நீதிமன்றில் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating