வெள்ளோடு அருகே பள்ளிக்கு சென்ற மாணவன் மாயம்!!
Read Time:1 Minute, 19 Second
பெருந்துறை ஆர்.எஸ்.பகுதியில் உள்ள குமரன் நகரை சேர்ந்தவர் அம்மாசி. கட்டிடங்களுக்கு கம்பிகள் கட்டும் பணி செய்து வருகிறார். இவரது மகன் வடிவேல் (வயது 13).
இவர் பெருந்துறை தோப்புபாளையத்தில் உள்ள அரசு நடுநிலை பள்ளியில் 7–ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த 12–ந் தேதி காலை பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை.
வீடு திரும்பாத வடிவேலுவை அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கும் கிடைக்கததால் வடிவேலுவின் தந்தை அம்மாசி வெள்ளோடு போலீசில் புகார் செய்தார்.
வெள்ளோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார். மேலும் மாணவன் குறித்து பள்ளியில் விசாரித்த போது கடந்த 3–ந் தேதி முதலே பள்ளிக்கு வரவில்லை என்பதும் தெரியவந்தது.
Average Rating