பழனி அருகே கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த புதுப்பெண்!!
பழனி அருகில் உள்ள பாலசமுத்திரத்தை சேர்ந்த மகுடீஸ்வரன் மகள் நதியா என்ற வீரம்மாள் (வயது21). இவருக்கும் மணிகண்டராஜா என்பவருக்கும் கடந்த 9.7.2014ம் தேதி திருமணம் நடந்தது. இதனையடுத்து கடந்த 19.10.2014-ந்தேதி தலைதீபாவளிக்காக தனது மனைவியுடன் மணிகண்டராஜா மாமனார் வீட்டிற்கு வந்தார்.
அதன்பிறகு மனைவியை மாமனார் வீட்டிலேயே விட்டுவிட்டு தான் வேலை விசயமாக வெளியூர் செல்வதாகவும் மீண்டும் வரும்போது அழைத்து செல்வதாகவும் கூறிவிட்டு சென்று விட்டார்.
இந்த நிலையில் கணக்கன்பட்டியை சேர்ந்த கருப்புசாமி மகன் விமல்(24) என்பவருடன் நதியாவிற்கு பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது.
சம்பவத்தன்று அவர்கள் 2 பேரும் ஊரை விட்டு ஓடிவிட்டனர். மணிகண்டராஜா வெளியூர் சென்று திரும்பிய போது தனது மனைவியை பற்றி கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் பழனி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்–இன்ஸ்பெக்டர் பாப்பாத்தி வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்.
Average Rating