நாங்குநேரி அருகே வீடு புகுந்து இளம்பெண் கற்பழிப்பு: 2 வாலிபர்கள் கைது!!
நெல்லை மாவட்டம் நாங்குநேரியை அடுத்த பரப்பாடி வேப்பன்குளம் நடுத்தெருவை சேர்ந்தவர் செல்வி (வயது 29, பெயர் மாற்றப்பட்டுள்ளது). மனநிலை பாதிக்கப்பட்டவரான இவருக்கு திருமணம் ஆகவில்லை.
சம்பவத்தன்று செல்வியின் பெற்றோர் வெளியே சென்று விட்டனர். அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அப்பகுதியை சேர்ந்த பூச்செண்டு மகன் மகாராஜன் (19), அய்யாபிள்ளை மகன் சரவணகுமார் (17) ஆகியோர் வீட்டிற்குள் புகுந்தனர்.
பின்னர் 2பேரும் சேர்ந்து செல்வியை கற்பழித்தனர். அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் வீட்டிற்கு விரைந்து வந்தனர்.
பொதுமக்கள் வருவதை அறிந்த 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இது குறித்து செல்வியின் தந்தை விஜயநாராயணம் போலீசில் புகார் செய்தார். புகாரில் மகாராஜன், சரவணகுமார் ஆகிய 2பேரும் சேர்ந்து தனது மகளை கற்பழித்ததாக கூறியிருந்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தார். வீடு புகுந்து பெண் கற்பழிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Average Rating