முச்சக்கர வண்டி வீட்டு கூரைமீது விழுந்து இராணுவ வீரர்கள் இருவர் பலி மூவர் படுகாயம்!!
Read Time:1 Minute, 13 Second
மாத்தறை – நாவிமன வீதியில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர்கள் இருவர் உயிரிழந்து மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
நாவிமன பகுதியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து வீடு ஒன்றின் கூரைமீது விபத்துக்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த 5 இராணுவ வீரர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
முச்சக்கர வண்டியை செலுத்திச் சென்ற 48 வயது இராணுவ வீரரும் 33 வயது வீரரும் உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் நாவிமன இராணுவ முகாமில் பணியாற்றுபவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து குறித்து மாத்தறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating