விஹாரை நிலத்தைக் கோரி ஆர்ப்பாட்டம்!!
Read Time:1 Minute, 16 Second
ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் பூஜித அதுரலிய ரத்ன தேரரின் இராஜகிரிய பகுதியிலுள்ள விஹாரைக்கு சொந்தமான நிலத்தை தமக்கு பெற்றுத் தருமாறு கோரி சிலர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சுமார் ஐந்தரை ஏக்கர் நிலப்பரப்பு விஹாரைக்காக வழங்கப்பட்டுள்ளதால் தாம் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இவர்கள் பேரணியாக கோட்டே மாநகர சபைக்குச் சென்றனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மாநகர சபைத் தலைவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
எதுஎவ்வாறு இருப்பினும் தேரர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைபில் இருந்து விலகியதை அடுத்தே, அவருக்கு முறையற்ற விதத்தில் அழுத்தம் கொடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Average Rating