ஓமலூர் அருகே 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: சிறுவன் கைது!!
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த முத்துநாயக்கன்பட்டி மலையனூர் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி அங்குள்ள ஒரு பள்ளியில் 2–ம் வகுப்பு படித்து வருகிறாள். சம்பவத்தன்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற மாணவியை அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் பள்ளிக்கு செல்லும் வழியில் இருந்த சோளக்காட்டுக்கு இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதில் மாணவி வலியால் துடித்து கத்தியதால் பக்கத்து தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் ஓடி வந்தனர். அவர்களை பார்த்த சிறுவன் ‘இதை யாரிடமாவது சொன்னால் கொன்று விடுவேன்’ என மிரட்டி விட்டு அந்த இடத்தில் இருந்து ஓடி விட்டான்.
இதைத்தொடர்ந்து பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பி யாரிடமும் கூறவில்லை. மறு நாள் காலையில் சிறுமியின் தாய் மாணவியை குளிக்க வைத்து உள்ளார். அப்போது மாணவியின் உடலில் காயம் இருந்ததை அறிந்து அங்குள்ள மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்.
சிறுமியை டாக்டர் பரிசோதித்தார். அப்போது மாணவி அதே பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவன் சோளக்காட்டுக்கு இழுத்து சென்று என்னிடம் தவறாக நடந்தார் என தெரிவித்தாள். இதையடுத்து ஓமலூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர்.
Average Rating