மேர்வினுக்கு ஏமாற்றம்: மாலக்க சில்வா மீண்டும் விளக்கமறியலில்!!

Read Time:1 Minute, 36 Second

703248531561107728malaka2பம்பலபிட்டி இரவு களியாட்ட விடுதியில் பிரித்தானிய ஜோடி மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வாவிற்கு நான்காவது முறையாகவும் பிணை வழங்க மறுக்கப்பட்டுள்ளது.

இன்று (25) நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட மாலக்க சில்வா உள்ளிட்ட அறுவரை எதிர்வரும் 28ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான பிரித்தானிய ஜோடி இன்றைய தினம் அடையாள அணிவகுப்புக்கென நீதிமன்றில் ஆஜராகியிருந்த நிலையில் அடையாள அணிவகுப்பை 28ம் திகதிக்கு ஒத்திவைத்து கொழும்பு மேலதிக நீதவான் எம்.எம்.சஹபதீன் உத்தரவிட்டார்.

வழக்கு விசாரணைக்கு மேர்வின் சில்வாவும் வந்திருந்த நிலையில் ஏமாற்றத்துடன் வெளியேறியுள்ளார்.

கடந்த 18ம் திகதியும் 25ம் திகதியும் அடையாள அணிவகுப்பு நடத்தப்படவிருந்த நிலையில் அன்றைய தினம் பிரித்தானிய ஜோடி நீதிமன்றுக்கு வருகை தராததால் ஒத்திவைக்கப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பி.ராஜதுரை எம்பி ரணிலை சந்தித்து ஐதேகவில் சங்கமமானார்!!
Next post த.தே.கூ சேருவில பிரதேச சபை உறுப்பினர் ஆளும் கட்சியில் இணைவு!!