மஹிந்தவா? மைத்திரியா? மு.காங்கிரஸும் கூட்டமைப்பும் குழப்பத்தில்!!

Read Time:1 Minute, 23 Second

8364645451610184059tna-slmc2எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து தீர்மானிக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடம் இன்று மாலை கூடுகிறது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் தலைமையில் கூட்டம் இடம்பெறவுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் கடந்த வாரமளவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.

அதன்போது ஜனாதிபதியிடம் கோரிக்கைகள் பலவற்றை முன்வைத்ததாகவும் அதற்கு கிடைக்கப்பெற்ற பதில் தொடர்பில் இன்றைய கூட்டத்தில் ஆராய உள்ளதாகவும் முஸ்லிம் காங்கிரஸின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் குறித்து இதுவரை எவ்வித முடிவும் எடுக்கவில்லை. எதிர்வரும் வாரங்களில் கூட்டமைப்பு முடிவை அறிவிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜனாதிபதி மஹிந்த இன்று திருப்பதி விஜயம்: எதிர்ப்பும் பாதுகாப்பும் தீவிரம்!!
Next post தேர்தலுக்கு முன் தேசிய அடையாள அட்டை!!