பழனியில் அரசு ஆஸ்பத்திரியில் தூக்கில் தொங்கிய பெண்!!

Read Time:1 Minute, 49 Second

d9d51489-8f0c-41f9-971f-4aeb05c55f49_S_secvpfபழனி அருகில் உள்ள புது ஆயக்குடி 2–வது வார்டை சேர்ந்தவர் பரமன்(65). கூலிவேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மகுடீஸ்வரி(60). இவர்களுக்கு ராஜேஸ்வரி என்ற ஒரு மகள் உள்ளார். அவர் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார்.

மகுடீஸ்வரிக்கு உடல்நலம் குறைவு காரணமாக கடந்த 2–ந்தேதி அதே பகுதியில் உள்ள குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை காப்பாற்றி பழனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதிகாலை நேரத்தில் பெண்கள் வார்டு பகுதியில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது மகுடீஸ்வரி வார்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கண்விழித்து பார்த்தபோது மற்ற நோயாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை இறக்கி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பழனி அரசு ஆஸ்பத்திரி மருத்துவ அதிகாரி (பொறுப்பு) டாக்டர் உதயகுமார் பழனி டவுன் போலீசில் புகார் செய்தார். சப்–இன்ஸ்பெக்டர் பார்வதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

அரசு ஆஸ்பத்திரியிலேயே பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பழனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாத்திட அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி!!
Next post திருமுல்லைவாயலில் குடும்ப தகராறில் மனைவியை அடித்து கொன்ற கணவர்!!