பெருந்துறை அருகே வாய்க்காலில் குதித்து மூதாட்டி தற்கொலை!!

Read Time:1 Minute, 54 Second

583f838b-596a-42f5-9456-fb7b85b0a51a_S_secvpfபெருந்துறை அருகே உள்ள பல்லகவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் நாச்சிமுத்து. இவரது மனைவி கமலம் (வயது 63). கமலம் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தார். மேலும் அவருக்கு முதுகுதண்டு வட வலியும் இருந்தது. வலி வரும் போதெல்லாம் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். மருந்து மாத்திரையும் சாப்பிட்டு வந்தார்.

இதனால் மனவேதனையில் கமலம் இருந்து வந்தார். இதில் மனநிலை பாதிக்கப்பட்டவராகவும் இருந்து வந்தாராம்.

இந்த நிலையில் கடந்த 6–ந் தேதி அதிகாலை 5 மணியளவில் கமலம் வீட்டை விட்டு வெளியே சென்றார். பிறகு பெருந்துறை அருகே உள்ள வாய்க்கால்மேடு பகுதிக்கு வந்தார். பிறகு அங்கிருந்த கீழ்பவானி வாய்க்காலில் தற்கொலை செய்ய பாய்ந்து குதித்தார்.

இதை கண்ட அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு ஓடி வந்தனர். வாய்க்காலில் தத்தளித்து இழுத்து செல்லப்பட்ட கமலத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பிறகு 108 ஆம்புலன்சை வரவழைத்து சிகிச்சை பெற ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் விசாரணை நடத்தி வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதல் தொல்லை கொடுத்த சிறுவனை போலீசில் சிக்க வைத்த பள்ளி மாணவி!!
Next post மேலூர் அருகே போலி பெண் டாக்டர் கைது!!