நாடு திரும்பிய பிணைக்கைதி: மகிழ்ச்சியுடன் வரவேற்ற ஜனாதிபதி (வீடியோ இணைப்பு)!!
அல்கொய்தா தீவிரவாதிகளால் பிரான்சை சேர்ந்த பிணைக்கைதி ஒருவர் விடுவிக்கப்பட்டு நாடு திரும்பியுள்ளார்.
கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் செர்ஜி லாசாரெவிக் (Serge Lazarevic) என்ற நபர் அல்கொய்தா தீவிரவாதிகளால் ஆப்ரிக்காவின் மாலி (Mali) என்ற நாட்டில் கடத்தப்பட்டார்.
இதன்பின் பல முறை இவர் கொல்லப்படவுள்ளதாக தீவிரவாதிகளால் வீடியோவின் மூலம் அறிவிக்கப்பட்டார்.
ஆனால் தற்போது அதிஷ்டவசமாக இவரை அல்கொய்தா அமைப்பினர் விடுவித்துள்ளனர்.
இதுகுறித்து செர்ஜி கூறுகையில், நான் கடந்த மூன்று வருடங்களாக மரண பயத்தில் இருந்தேன் என்றும் என்னுடன் இருந்த பல பிணைக்கைதிகள் கொடூரமாக கொல்லப்பட்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் செர்ஜியை விமான நிலையத்திலேயே வரவேற்க பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்ஸிஸ் ஹோலாண்டே காத்திருந்து அவரை வரவேற்றுள்ளார்.
மேலும் அல்கொய்தா பிடியில் இருந்த கடைசி பிரெஞ் பிணைக்கைதி செர்ஜி என கூறப்படுகிறது.
Average Rating