சேலத்தில் காதலன் ஏமாற்றியதால் இளம்பெண் தற்கொலை முயற்சி!!
சேலம் மணக்காட்டை சேர்ந்தவர் ராணி (வயது 22– பெயர் மாற்றப்பட்டுள்ளது). பட்டதாரியான இவர் சேலத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அப்போது இவருக்கும் சேலம் கந்தம்பட்டியை சேர்ந்த வாலிபர் சுகுமார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் நெருங்கி பழகி வந்தனர்.
அப்போது வாலிபர் சுகுமார், ராணியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பழகி வந்தார். இந்நிலையில் ராணி, சுகுமாரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள கூறினார். அதற்கு அவர் மறுத்துவிட்டு தனக்கு வேறு இடத்தில் பெண் பார்க்கிறார்கள். இதனால் தன்னை மறந்து விடுமாறு கூறி சென்று விட்டார்.
இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ராணி விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதை அறிந்த அவரது பெற்றோர் ராணியை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தை அடுத்து ராணியின் பெற்றோர் இன்று காலை சேலம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து தங்களது குடும்பத்தினரை சிலர் மிரட்டுகிறார்கள்.
இதனால் எங்களுக்கு பாதுகாப்பு தரவேண்டும். மிரட்டுபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு கொடுத்தனர். இதன் பேரில் விசாரணை நடக்கிறது.
Average Rating