காட்பாடியில் ஓடும் ரெயிலில் சிறுமியிடம் சில்மிஷம்: வாலிபர் கைது!!
மங்களூரிலிருந்து காட்பாடி வழியாக சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயிலில் பதிவு செய்யப்பட்ட பெட்டியில் சென்னை வியாசர்பாடி பெரியார் நகரை சேர்ந்த 10 வயது சிறுமி தனது பெற்றோருடன் பயணம் செய்தார்.
இன்று அதிகாலை 2.45 மணியளவில் காட்பாடிக்கு ரெயில் வந்தது. அப்போது பெட்டியில் இருந்த அனைத்து பயணிகளும் அசந்து தூங்கிக்கொண்டிருந்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அதே பெட்டியில் பயணம் செய்த பள்ளிப்பட்டு அடுத்த எஸ்.பி. கண்டிகையை சேர்ந்த ரமேஷ் (29) என்ற வாலிபர், சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.
அப்போது அதிர்ச்சி அடைந்த சிறுமி சத்தம் போட்டார். திடுக்கிட்டு எழுந்த சிறுமியின் பெற்றோர் அந்த வாலிபரை பிடித்து காட்பாடி ரெயில்வே போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
காட்பாடி இன்ஸ்பெக்டர் தங்கராஜ், சப்–இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ரமேஷை கைது செய்தனர்.
Average Rating