தாய்பால் கொடுக்கும் பெண்களா நீங்கள்: டீ, காப்பி குடிப்பதை தவிர்க்கவும்!!

Read Time:2 Minute, 2 Second

mothercoffee_002தாய்பால் கொடுக்கும் காலங்களில் அதிகளவு சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
ஒரு நாளைக்கு 3 வேளைக்கு உணவு உண்பது என்பது இல்லை. கூடுதலாக ஒரு வேளை உணவு உட்கொள்ளலாம்.

* முழு பருப்பு வகைகள், முளை கட்டின பருப்பு வகைகள் உணவுப் பொருட்களை அதிகம் உட்கொள்ள வேண்டும். பால் /இறைச்சி/முட்டை போன்ற உணவுகளை எடுத்தும் கொள்ளலாம்.

* பழங்கள் மற்றும் காய்கறிகளை மிக அதிகளவில் உட்கொள்ளலாம். மதுவகைகள் மற்றும் புகையிலை போன்றவை உட்கொள்ளக்கூடாது.

* மருத்துவர் பரிந்துரை செய்த மருந்தினை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். கர்ப்ப காலத்தில் 14-16 வாரங்கள் தொடங்கி தாய்பால் கொடுப்பதை நிறுத்தும் காலம் வரை இரும்புச் சத்து, போலேட் மற்றும் சுண்ணாம்பு சத்து நிறைந்த உணவுகளை கூடுதலாக தொடர்ந்து அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

* உணவுக்கு முன்னும் மற்றும் பின்னும் தேனீர் (டி) மற்றும் காப்பி போன்ற பானங்கள் உட்கொள்வதினால் உணவில் உள்ள இரும்புச் சத்தானது கிடைப்பது இல்லை. எனவே மேற்கூறிய பானங்களை உணவிற்கு முன்னும் பின்னும் தவிர்ப்பது மிக அவசியம்.

* கர்ப்பிணி பெண்களுக்கு நடைபயிற்சி மற்றும் பிற தேவையான உடற்பயிற்சிகள் தேவை. அதிக வேலைகள் செய்வதை அவசியம் தவிர்க்க வேண்டும். குறிப்பாக கர்ப்ப காலத்தில் கடைசி மாதத்தில் தவிர்க்க வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பர்தா அணியாமல் குட்டை பாவடையில் உலாவிய பெண்: வெடித்தது சர்ச்சை (வீடியோ இணைப்பு)!!
Next post அரவிந்தடி சில்வாவின் வீட்டில் கொள்ளையிட்டவர் சிக்கினார்!!