டெல்லியில் சிறுமி கற்பழிப்பு: 3 வாலிபர்களுக்கு 10 ஆண்டு ஜெயில்!!
டெல்லி நங்லாய் என்ற இடத்தை சேர்ந்த ஒரு சிறுமி கடந்த 2006-ம் ஆண்டு மே மாதம் 20-ந் தேதி அன்று பஸ்சுக்காக காத்திருந்தபோது, அங்கு காரில் வந்த 3 வாலிபர்கள், அவளை வடமேற்கு டெல்லிக்கு கடத்திச் சென்றனர். அங்கு ஒரு வீட்டில் அடைத்து வைத்து கற்பழித்தனர். பின்னர் ஓடும் காரில் துப்பாக்கிமுனையிலும் தொடர்ந்து சிறுமி கற்பழிக்கப்பட்டாள். அப்போது அவர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
இந்த வழக்கை விசாரித்த டெல்லி கூடுதல் மாவட்ட நீதிபதி எம்.சி.குப்தா, 3 வாலிபர்களுக்கும் தலா 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் ரூ.45 ஆயிரம் அபராதம் விதித்தும் நேற்று தீர்ப்பு கூறினார்.
தண்டனை பெற்ற மஞ்சித்சிங் (வயது 28) என்பவன் எம்.பி.ஏ. இறுதி ஆண்டு படித்த மாணவர் ஆவார். இன்னொரு வாலிபரான சந்தீப் யாதவ் (26) பிரபல ஆக்கி வீரரின் சகோதரர் ஆவார். தீபக் மாலிக் (21) என்பவர் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating