டெல்லியில் பிறந்த நாளன்று பர்த்டே பார்ட்டிக்கு அழைத்து பெண் பாலியல் பலாத்காரம்: இருவர் கைது!!
பெற்றோர் இல்லாத 18 வயதான மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண், உறவினர்கள் உதவியுடன் டெல்லியின் கிழக்குப் பகுதியில் வசித்து வருகிறார். டெல்லியின் மோடி பா பகுதியில் உள்ள இரண்டு நண்பர்கள் இவருக்கு வேலை வாங்கித் தருகிறேன் என்று சொன்னதால் அடிக்கடி அவர்களைச் சந்தித்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று அந்தப் பெண்ணுக்கு பிறந்த நாள் என்பதால் இரண்டு நண்பர்களும் ’பர்த் டே பார்ட்டிக்காக’ அவரை தங்கள் வீட்டிற்கு அழைத்துள்ளனர்.
பார்ட்டியில் கலந்து கொள்ள அப்பெண் தன்னுடன் நண்பர் ஒருவரையும் அழைத்து வந்துள்ளார். அனைவருக்கும் உயர் ரக மது வகைகள் பரிமாறப்பட்டது. பார்ட்டி முடிந்து அப்பெண்ணுடன் வந்த நண்பர் சென்றுவிட விருந்துக்கு அழைத்த நண்பர்களுடன் அப்பெண் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது குடிபோதையில் இருந்த அந்தப் பெண்ணை இரண்டு நண்பர்களும் பாலியல் பலாத்காரம் செய்தனர். நேற்று காலை 7.30 மணியலவில் வீட்டிலிருந்து வெளியேறிய அந்தப் பெண் அருகே உள்ள ஆர்.கே புரம் பேருந்து நிலையத்திலிருந்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவித்தார்.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் வீட்டிற்குள் புகுந்து குடிபோதையில் இருந்த இரண்டு பேரையும் கைது செய்து இ.பி.கோ. 376 சட்டத்தின் படி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இரண்டு பேரில் 17 வயதான (மைனர்) வாலிபரை சிறுவர்களுக்கான நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர்.
இந்த சம்பவம் குறித்துக் கேள்விப்பட்ட டெல்லி பெண்கள் ஆணையத் தலைவரான பர்கா சிங் ஆர்கே புரம் காவல் நிலையத்திற்குச் சென்று அந்தப் பெண்னை சந்தித்து, கவுன்சிலிங்கிற்காக தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு அனுப்பி வைத்தார்.
Average Rating