சூனியம் வைத்ததாக சந்தேகித்து 62 வயது மந்திரவாதி தலை துண்டித்து படுகொலை!!
Read Time:1 Minute, 25 Second
ஒடிசா மாநிலத்தில் உள்ள பலசோர் மாவட்டத்தில் சூனியம் வைத்ததாக சந்தேகித்து மலைவாழ் இனத்தை சேர்ந்த 62 வயது மந்திரவாதி தலையை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்குள்ள பாகாஜந்தா கிராமத்தை சேர்ந்த ஒருவரின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு சோதனை மேல் சோதனையாக தொடர்ந்து வாட்டி வந்துள்ளது.
இதே ஊரில் உள்ள டுக்கி சிங் என்ற மந்திரவாதி உன் குடும்பத்துக்கு சூனியம் வைத்துள்ளார். இதன் விளைவாகவே நீங்கள் இவ்வளவு துன்பப்படுகிறீர்கள் என்று அவரது நண்பர்கள் கூறியதாக தெரிகின்றது.
இதனையடுத்து, மந்திரவாதி டுக்கி சிங்கின் வீட்டுக்குள் நுழைந்த அந்த நபர், அவரை வெளியே இழுத்துப் போட்டு கைவாளால் தலையை துண்டித்துக் கொன்றார். நேராக போலீஸ் நிலையத்துக்கு சென்ற அவர் மந்திரவாதியை கொன்றுவிட்ட குற்றத்தை ஒப்புக் கொண்டு சரணடைந்தார்.
Average Rating