உ.பி.யில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கற்பழித்த 4 பேர் கொண்ட கும்பல்!!

Read Time:1 Minute, 42 Second

f254ea9d-9da2-4096-8b98-2cf1cc10fa33_S_secvpfஉத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரில் வீட்டில் தனியாக இருந்த 45 வயது பெண்ணை 4 பேர் கொண்ட கும்பல் கற்பழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீரட்டின் கான்கெர் கேரா என்ற பகுதியில் 45 வயதுடைய பெண் ஒருவர் தனது கணவனுடன் வசித்து வந்தார். நேற்று இரவு அவரது கணவன் வெளியில் சென்றுவிட்ட காரணத்தினால், அவர் வீட்டில் தனியாக இருந்தார். அந்த பெண் தனியாக இருப்பதை அறிந்துகொண்ட கல்லன், கல்பாம், அப்சால் உள்பட நான்கு பேர் அதிரடியாக வீட்டிற்குள் நுழைந்தனர். தனியாக இருந்த அந்த பெண்ணை கற்பழித்துள்ளனர். மேலும், இதுகுறித்து வெளியில் ஏதாவது கூறினால் கடுமையான விளைவை சந்திக்க நேரிடும் என்று மிரட்டியும் சென்றுள்ளனர்.

ஆனால், அந்த பெண் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து போலீசில் புகார் அளித்தார். போலீசார் அந்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனியாக இருந்த 45 வயது பெண்ணை நான்கு பேர் கொண்ட கும்பல் கற்பழித்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விடுதியில் தங்கி படித்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காண்காணிப்பாளர்!!
Next post சிவகாசியில் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த பெண் கொலை: கணவர் ஆத்திரம்!!