சிவகாசியில் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த பெண் கொலை: கணவர் ஆத்திரம்!!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பள்ளப்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது34). இவரது மனைவி காளீஸ்வரி (32).
இதே ஊரை சேர்ந்தவர் கலைவாணன் (25). இவருக்கும், காளீஸ்வரிக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. கருப்பசாமி இல்லாத நேரத்தில் இருவரும் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர்.
நேற்று கருப்பசாமி வெளியூர் சென்று விட்டார். இதனை பயன்படுத்தி காளீஸ்வரி, கலைவாணனை வீட்டுக்கு வரவழைத்துள்ளார்.
அங்கு இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். நள்ளிரவில் கருப்பசாமி வீட்டுக்கு வந்து விட்டார். அங்கு மனைவி, கலைவாணனுடன் தனியே இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
ஆத்திரம் அடைந்த அவர், மனைவி காளீஸ்வரி மற்றும் கலைவாணனை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த காளீஸ்வரி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.
கலைவாணன், பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் மயங்கினார். இதனை பார்த்ததும் கருப்பசாமி அங்கிருந்து தலைமறைவாகி விட்டார். அதன் பிறகு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று கலைவாணனை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
கொலை குறித்த தகவல் கிடைத்ததும் சிவகாசி கிழக்கு போலீசார் விரைந்து சென்று காளீஸ்வரி உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தப்பி ஓடிய கருப்பசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.
Average Rating