திருச்சி காஜாபேட்டையில் துணி வியாபாரியை மானபங்க படுத்த முயன்ற தொழிலாளி கைது!!
Read Time:53 Second
திருச்சி காஜாபேட்டை மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் ரெங்கம்மாள். துணி வியாபாரியான இவர் நேற்று காஜாபேட்டை பொதுக்கழிப்பிடம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த தொழிலாளியான மாரிமுத்து என்பவர் ரெங்கம்மாளிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவரை பிடித்து கீழே தள்ளியதுடன் மானபங்கப்படுத்தவும் முயன்றுள்ளார்.
இதுகுறித்து ரெங்கம்மாள் பாலக்கரை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாரிமுத்துவை கைது செய்தனர்.
Average Rating