ஜீவாவுடன் இணைந்து நடிக்கும் பாபி சிம்ஹா!!
கடந்த வருடம் வெளியாகி ரசிகர்களை சிரிக்க வைத்து பயமுறுத்திய படம் ‘யாமிருக்க பயமே’. இதில் கிருஷ்ணா, ரூபா மஞ்சரி, ஓவியா, கருணா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். காமெடி திரில்லராக வெளிவந்த இப்படத்தை தொடர்ந்து டி.கே அடுத்தப் படத்தை இயக்க தயாராகிவிட்டார். இவர் இயக்கும் அந்த புதிய படத்தை ‘யாமிருக்க பயமே’ படத்தை தயாரித்த ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் நிறுவனம் சார்பாக எல்ரெட் குமாரே தயாரிக்கிறார்.
இப்படம் முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகவுள்ளது. இப்படத்தின் கதையை ஜீவாவிடமும், பாபி சிம்ஹாவிடம் டி.கே கூறியிருக்கிறார். இருவரும் இப்படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. ஆதலால் இருவரையும் வைத்து டி.கே. இயக்குவார் என்று தெரிகிறது. மேலும் இதில் நடிக்கும் நடிகைகளும் இன்னும் தேர்வாகவில்லை.
‘யாருமிருக்க பயமே’ படம் போல் இப்படமும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Average Rating