பீகாரில் மகளை கொன்ற தந்தைக்கு மரண தண்டனை!!

Read Time:1 Minute, 39 Second

36610e5d-435e-4c79-85c4-d44492930101_S_secvpfபீகார் மாநிலம், பாகல்பூர் மாவட்டத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்னர் தனது 15 வயது மகளை கழுத்தை நெறித்துக் கொன்ற தந்தைக்கு இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த 2013-ம் ஆண்டு தனது தாய்வழி பாட்டி வீட்டில் தங்கச் சென்ற அந்த சிறுமிக்கு அங்குள்ள ஒரு வாலிபருடன் காதல் ஏற்பட்டதை அவரது தந்தை பிரகாஷ் யாதவ் என்பவர் அறிந்தார். அவளை தனது சொந்த கிராமத்துக்கு உடனடியாக அழைத்துவந்த அவர், பெற்ற மகள் என்றும் கருதாமல் அவரது கழுத்தை நெறித்துக் கொன்றார்.

இந்த படுகொலை தொடர்பாக சிறுமியின் தாத்தா அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலையாளி பிரகாஷ் யாதவை கைது செய்து பாகல்பூர் மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கில் இன்று தீர்ப்பு அளித்த நீதிபதி ஜனார்த்தன் திரிபாதி, குற்றவாளி பிரகாஷ் யாதவுக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார். அவருடன் கைது செய்யப்பட்ட மேலும் இருவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் முறையான வகையில் நிரூபிக்கப்படவில்லை என கூறி அவர்களை விடுதலை செய்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மஹிந்த ராஜபக்ஷவை விட்டு வரும்போது, கவலையாக இருந்தது.. அதனை உணர்ந்தேன், அதனால் தான் சொல்லாமல் வந்தேன்.. (டாக்டர் ராஜித்த சேனா­ரத்ன வழங்­கிய செவ்வி)!!
Next post பஸ்சில் செல்போன் திருடிய 3 சிறுவர்கள் கைது!!