படிக்காததை கண்டித்ததால் பிளஸ்–2 மாணவி தற்கொலை!!
Read Time:1 Minute, 1 Second
பெரியபாளையம் அருகே உள்ள வடமதுரை பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகள் கவுசல்யா (17). கன்னிகை பேரில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார்.
கடந்த 13–ந்தேதி மாலை கவுசல்யா படிக்காமல் தோழிகளுடன் பேசிவிட்டு தாமதமாக வீட்டுக்கு வந்ததாக தெரிந்தது. இதனை அவரது பெற்றோர் கண்டித்தனர். இதில் மனவேதனை அடைந்த கவுசல்யா விஷத்தை குடித்து வீட்டில் மயங்கி விழுந்தார்.
அவரை மீட்டு சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். நேற்று இரவு சிகிச்சை பலனின்றி கவுசல்யா பரிதாபமாக இறந்தார். இது குறித்து பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating