காதலியிடம் ஆபாச படம் காட்டி செக்ஸ் தொல்லை: வாலிபரிடம் போலீசார் விசாரணை!!
திருவனந்தபுரம் களக்கூட்டத்தை சேர்ந்த 24 வயது வாலிபர் ஒருவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார்.
இவரும், இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதையறிந்த இருவரின் பெற்றோரும் காதலுக்கு சம்மதம் தெரிவித்து திருமணம் நிச்சயித்தனர். அடுத்த மாதம் 4–ந்தேதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், சமீபத்தில் விடுமுறைக்கு ஊருக்கு வந்த வாலிபர் காதலர் தினத்தை கொண்டாடுவதற்காக காதலியுடன் கன்னியாகுமரிக்கு வந்தார். அங்கு ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கிய காதல் ஜோடி பல்வேறு இடங்களுக்கு சுற்றித்திரிந்தனர். நேற்று முன்தினம் இரவு வாலிபர் செக்ஸ் உணர்ச்சிகளை தூண்டும் மாத்திரைகளை தின்று காதலியிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகவும், செல்போனில் செக்ஸ் படத்தை காட்டி அதே போன்று நடக்குமாறு கூறி காதலியை அடித்து உதைத்து சித்ரவதை செய்ததாகவும் கூறப்படுகிறது.
காதலனின் செக்ஸ் தொல்லை தாங்க முடியாமல் அந்த இளம்பெண் அறையில் இருந்து தப்பி ஓடி விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த வாலிபர் கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் அங்குமிங்குமாக அலைந்து திரிந்து காதலியை தேடினார்.
இவரது நடவடிக்கைகள் அங்கிருந்தவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இது பற்றிய தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வாலிபரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். அவரிடம் இருந்த செல்போன் மூலம் போலீசார் அவரது உறவினர் ஒருவரை தொடர்பு கொண்டு விசாரித்தனர். அப்போது வாலிபருடன் சண்டை போட்டு விட்டு அவரது காதலி உறவினர் வீட்டுக்கு சென்றிருப்பது தெரிய வந்தது.
மேலும், அந்த வாலிபர் போதை பழக்கத்திற்கு அடிமையானதும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து வாலிபரின் உறவினரை கன்னியாகுமரிக்கு வரவழைத்து அவருடன் வாலிபரை அனுப்பி வைத்தனர்.
Average Rating