தனது தற்கொலையை செல்ஃபி எடுத்த நடிகை!!
தெலுங்கு தொலைக்காட்சி நடிகையான தீப்தி தற்கொலை செய்து கொண்டார். இந்தக் காட்சியை அவர் தனது ஐபாட் மூலம் செல்ஃபி எடுத்து கொண்டது தெரியவந்துள்ளது.
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம், தனுகு பகுதியைச் சேர்ந்தவர் தீப்தி என்கிற ராமலட்சுமி (31) கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றவர். இவருடையை மகள் முன்னாள் கணவருடன் வசித்து வருகிறார். இதையடுத்து தீப்தி, ஹைதராபாத் பாலாநகர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். ‘ ஆடதே ஆதாரம்’, ‘ஆஹ்வானம்’, ‘லக்கி லட்சுமி’ உள்ளிட்ட பல தெலுங்கு தொலைகாட்சி தொடர்களில் நடித்து பிரபலம் ஆகி உள்ளார்.
இந்நிலையில், இவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு, தனது வீட்டின் அறையிலிருந்த மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை இவர் தனது ஐபாட் போனில் செல்ஃபி எடுத்துள்ளார்.
இவர் தற்கொலை செய்து கொண்டபோது, இவரது குடியிருப்புக்கு வெளியே, தொலைகாட்சி தொடரின் தாயாரிப்பு பிரிவின் உதவியாளர் ரமேஷ் குமார் என்பவர் காத்துக் கொண்டிருந்துள்ளார். பின்னர் அவர் கொடுத்த தகவலின்படி சனத் நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating