தாராபுரம் அருகே 9–ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்: கொத்தனார் கைது!!
Read Time:1 Minute, 5 Second
தாராபுரம் சென்னக்காம்பாளையத்தை சேர்ந்த மாணவி அங்குள்ள அரசு பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது சத்திரத்தை சேர்ந்த கொத்தனார் சசிக்குமார் (வயது 24) மாணவி தனியாக இருப்பதை அறிந்து வீட்டுக்குள் நுழைந்தார். அதிர்ச்சியடைந்த மாணவி சத்தம்போட முயன்றார். எனினும் வாயை பொத்தி சசிக்குமார் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார்.
இது குறித்து மாணவியின் தந்தை தாராபுரம் போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி, சப்–இன்ஸ்பெக்டர் சிவசங்கரி ஆகியோர் சசிக்குமாரை கைது செய்தனர்.
Average Rating