12 வயது சிறுமி கற்பழித்து, கொலை: பீகாரில் தொடரும் கொடூரம்!!
Read Time:1 Minute, 20 Second
பீகார் மாநிலம், ககாரியா மாவட்டத்தின் ரத்தன் கிராமத்தை சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவியை நேற்றில் இருந்து காணவில்லை என அவளது பெற்றோர் போலீசில் புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தபோது நேற்றிரவு கற்பழிக்கப்பட்ட நிலையில் அந்த 12 வயது சிறுமியின் பிணத்தை போலீசார் மீட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக இரு வாலிபர்களை கைது செய்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் கற்பழித்து கொல்லப்பட்ட சிறுமியின் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கும், கற்பழித்த இரு வாலிபர்களின் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கும் இடையில் கலவரம் மூளும் சூழ்நிலை ஏற்பட்டதால் ரத்தன் கிராமம் மற்றும் சுற்றுப்பகுதியில் இன்று காலை முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ககாரியா மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் தெரிவித்துள்ளார்.
Average Rating