அம்மா முதல்வராகக் கோரி தன்னை சிலுவையிலறைந்த கராத்தே மாஸ்டர்!!
Read Time:1 Minute, 15 Second
இந்தியாவின் பிரபல கராத்தே மாஸ்டர் ஷிஹான் ஹுசைனி என்பவர் ஜெயலலிதா மீண்டும் தமிழகத்தின் முதல்வராக வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் தன்னைத் தானே சிலுவையில் அறைந்து கொண்டார் .
அ.இ.தி.மு.க. பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மீண்டும் பதவிக்கு வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்து, பெரிய மர சிலுவையில் தனது கைகள் மற்றும் கால்களில் பெரிய ஆணிகளை அடித்துக் கொண்டுள்ளார்.
அவரது வில்வித்தை மையத்தில் வைத்து இந்த சிலுவையில் அறைந்து கொள்ளும் வேண்டுதலை அவர் நடத்தினார்.
ஹுசைனி கராத்தே வீரர் மட்டுமல்ல. திரைப்படங்களில் பலமுறை நடித்துள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு 11 லீற்றர் மனித இரத்தத்தைச் சேகரித்து ஜெயலலிதாவின் சிலையை வடிவமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Average Rating