சிவகாசி அருகே 8–ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை!!
Read Time:1 Minute, 20 Second
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள எரவார்பட்டியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் செல்வி (வயது13). இவர் சுப்பிரமணியபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த சில நாட்களாக செல்வி பள்ளிக்கு சரிவர செல்லவில்லை என கூறப்படுகிறது. மேலும் தேர்வில் குறைந்த மதிப்பெண் வாங்கியுள்ளார். இதனை செல்வியின் பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த செல்வி சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். உடல் கருகிய நிலையில் அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் வெம்பக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Average Rating