திகார் சிறையில் கற்பழிப்பு குற்றவாளியிடம் பேட்டி: போலீஸ் வழக்கு பதிவு!!
Read Time:1 Minute, 10 Second
டெல்லியில் மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்காக திகார் சிறையில் உள்ள தூக்கு தண்டனை கைதியான அந்த பஸ்சின் டிரைவர் முகேஷ் சிங்கிடமும் பேட்டி எடுக்கப்பட்டுள்ளது.
இதனை கண்டித்து போராட்டங்கள் நடந்ததன் எதிரொலியாக, டெல்லி போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனாலும் முதல் தகவல் அறிக்கையில் யார் பெயரும் குறிப்பிடப்படவில்லை. இதுதொடர்பாக கோர்ட்டின் உத்தரவை பெற்று அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடரும் என்றும் போலீசார் தெரிவித்தனர். டெல்லி போலீஸ் கமிஷனர் பஸ்சி, ஊடகங்களும் சட்டத்தை மீறிய எதையும் ஒளிபரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
Average Rating