இந்திய எம்.பிக்களை அனுப்ப கோரிக்கை
இலங்கைப் பிரச்சினை குறித்து இலங்கை அரசுடன் பேச இந்தியாவிலிருந்து எம்.பிக்கள் குழுவை அனுப்ப வேண்டும் என்று இலங்கையைச் சேர்ந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அனந்தசங்கரி கோரிக்கை விடுத்துள்ளார். முன்னாள் எம்.பியான அனந்தசங்கரி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இலங்கையில் 50 ஆண்டுகளாக இனப் பிரச்சினை தொடர்ந்து கொண்டுள்ளது. அவ்வப்போது ஏதாவது தீர்வு ஏற்படுவது போலத் தோன்றினாலும் எதுவுமே நிரந்தரமாக அமைதியைக் கொண்டு வரவில்லை.
தற்போது விரைவில் தீர்வு கிடைக்கும் சூழ்நிலை நெருங்கி வருகிறது. இப்போது இந்தியா இப்பிரச்சினையில் தலையிட வேண்டியது அவசியம். இதற்காக இந்திய எம்.பிக்கள் குழுவை இலங்கைக்கு அனுப்பி இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
எம்.பிக்கள் குழுவை தமிழர் பகுதிகளுக்கும், சிங்களர் வாழும் பகுதிகளுக்கும் அனுப்பி உண்மை நிலையைக் கண்டறிய ஏற்பாடு செய்ய வேண்டும். இந்தியாவில் தமிழகத்திற்கு மத்திய அரசு என்னெனன் அதிகாரங்களை வழங்கியுள்ளதோ, அதேபோல தமிழர்கள் வாழும் பகுதிக்கு இலங்கை அரசு அதிகாரங்கள் வழங்க வேண்டும். இதை இந்தியா தான் வலியுறுத்திக் கூற வேண்டும் என்றார் அனந்தசங்கரி.
ஐந்து நாட்கள் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்யும் அனந்தசங்கரி இந்து பத்திரிக்கை ஆசிரியர் ராம், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் தா.பாண்டியன், துக்ளக் ஆசிரியர் சோ ஆகியோரை சந்தித்துப் பேசினார். முதல்வர் கருணாநிதியையும் அவர் சந்திக்க முயன்று வருகிறார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...