700 க்கும் மேற்பட்ட அரசு இணையதளங்கள் முடக்கம்: பாராளுமன்றத்தில் அதிர்ச்சி தகவல்!!
Read Time:1 Minute, 20 Second
இணையதளங்களை முடக்கும் ‘ஹேக்கிங்’ குழுக்கள் தங்கள் கைவரிசையை அரசு இணையதளங்களிலும் காட்டியுள்ளது. 2012-ஆண்டிலிருந்து இதுவரை 700க்கும் மேற்பட்ட அரசு இணையதளங்கள் முடக்கப்பட்டதாக பாராளுமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் எழுத்துப் பூர்வமாக கேள்வி ஒன்றிற்கு இன்று பதிலளித்த மத்திய தகவல் தொடர்பு மந்திரி ரவி ஷங்கர் பிரசாத், கணினி அவசர நடவடிக்கை குழுவிடம் உள்ள தரவுகளின்படி, 2012-ம் ஆண்டிலிருந்து 2015-ம் ஆண்டு (ஜனவரி) வரை பல்வேறு ஹேக்கிங் குழுக்களால் 700-க்கும் மேற்பட்ட அரசு இணையதளங்கள் முடக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
மேலும், அரசு இணையதளங்களில் பொதுமக்களுக்கு தேவையான தகவல் மட்டுமே இருக்குமென்றும், மற்றபடி அரசின் முக்கிய தகவல்கள் இணையத்திலிருந்து தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் என்றும் மத்திய மந்திரி குறிப்பிட்டார்.
Average Rating