சிகிச்சைக்கு வந்த பெண்ணை கற்பழித்த டாக்டருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை!!
மராட்டிய மாநில தலைநகரிலுள்ள பந்தப் பகுதியில் ஆயுர்வேத சிகிச்சை மையம் வைத்து நடத்தி வந்தவர் டாக்டர் நதிம் சலிம் ஷேக். இவரது கிளினிக்குக்கு திருமணமாகி குழந்தை பாக்கியம் இல்லாத ஒரு பெண் சிகிச்சைக்காக வந்தார்.
அவரை தனது செல்போனால் நிர்வாணக் கோலத்தில் படம் பிடித்து வைத்துக் கொண்ட டாக்டர், இந்த புகைப்படங்களை நான் வெளியிடாமல் இருக்க வேண்டுமானால் எனது ஆசைக்கு நீ இணங்கியே தீர வேண்டும் என கூறி மிரட்டி, பல சமயங்களில் பலவந்தமாக கற்பழித்தார்.
அவரது இம்சையை தாங்க முடியாமல் பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து, அந்த டாக்டரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த செல்போனை சோதனையிட்டபோது, புகார் அளித்த பெண்ணின் ஆபாசப் படங்கள் அதில் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. டாக்டர் நதிம் சலிம் ஷேக்கை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் அவர் மீது வழக்கு தொடர்ந்தனர்.
போலீஸ் தரப்பு சாட்சிகளாக 9 பேர் விசாரிக்கப்பட்டனர். இதில் அவர் மீதான குற்றம் நிரூபனம் ஆனதால் குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
Average Rating