பெண் போலீசிடம் ஆபாச பேச்சு: உதவி கமிஷனர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டம் பாயுமா?
சென்னை போலீஸ் உதவி கமிஷனர் ஒருவர் பெண் போலீசிடம் ஆபாசமாக பேசும் ஆடியோ வாட்ஸ் அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட உதவி கமிஷனர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பது உறுதியாகி விட்டது. இது தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகள் அவருக்கு விளக்கம் கேட்டு சம்மன் அனுப்ப உள்ளனர்.
இதற்கிடையே ஆபாசமாக பேசிய உதவி கமிஷனர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க முடியுமா? என்ற கேள்வியும் எழுந்து உள்ளது.
இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:–
சம்பந்தப்பட்ட பெண் போலீஸ் உதவி கமிஷனர் மீது புகார் செய்தால்தான் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். ஆபாசமாக பேசுதல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவு கீழ் உதவி கமிஷனர் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.
அதே நேரத்தில் பெண் போலீஸ் புகார் கொடுக்க வில்லை என்றாலும் வேறு மாதிரியான சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றியும் பரிசீலிக்கப்படும்.
Average Rating