ஆம்பூரில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 3 வயது பெண் குழந்தை பலி!!

Read Time:1 Minute, 36 Second

35ce9b52-ac17-4428-b705-c0ef66cd3ae5_S_secvpfஆம்பூர் பி.கஸ்பா மந்தகரை பகுதியை சேர்ந்தவர் நசுருதின். தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஷாபனா. இவர்களது மகள் ஷூகா (3). இன்று காலை 10 மணியளவில் ஷூகா வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தார்.

அப்போது வீட்டின் முன்பு மூடி திறந்த நிலையில் இருந்த 10 அடி ஆழமுள்ள நீர்தேக்க தொட்டியில் குழந்தை ஷூகா தவறி விழுந்தார். தொட்டியில் தண்ணீர் நிரம்பி இருந்ததால் குழந்தை மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக பலியானாள்.

வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த குழந்தை காணாமல் போனதை கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். தெருக்கள், உறவினர் வீடு உள்பட பல இடங்களில் தேடினர். பின்னர் சந்தேகப்பட்டு திறந்திருந்த தண்ணீர் தொட்டியை பார்த்தனர். அதில் குழந்தை ஷூகா பிணமாக மிதந்ததை கண்டு பெற்றோர் கதறி அழுதனர்.

இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தண்ணீர் தொட்டியில் விழுந்து பெண் குழந்தை பலியான சம்பவம் இப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திண்டிவனம் அருகே முட்டையிட்ட கோழிக்குஞ்சு!!
Next post ஆபாச ஆடியோ விவகாரம்: வாட்ஸ்–அப்பில் போட்டோக்களை அகற்றிய பெண்கள்!!