கரூர் தனியார் பள்ளியில் 4–ம் வகுப்பு மாணவியை பிரம்பால் அடித்த ஆசிரியை சஸ்பெண்டு!!

Read Time:1 Minute, 50 Second

86a96ae6-74f2-4749-b5d5-1c78534b0b88_S_secvpfசேலத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருபவர் சாதிக் அலி. இவரது மகள் பிஜிலா (வயது 9). கரூர் அரசு காலனியில் உள்ள தனது பாட்டி கதிஜா வீட்டில் இருந்து பிஜிலா அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் 4–ம் வகுப்பு படித்து வருகிறார்.

மாணவி பிஜிலாவிற்கு அவரது அறிவியல் ஆசிரியை கடந்த வெள்ளிக்கிழமை புராஜெட் ஒன்று கொடுத்துள்ளார். அதை செய்து முடிக்காமல் நேற்று பள்ளிக்கு சென்ற பிஜிலாவை ஆசிரியை பிரம்பால் அடித்துள்ளார். இதில் பிஜிலாவிற்கு 2 கால்களிலும் பிரம்பு தடம் பதிந்தது.

பள்ளி முடிந்து மாலையில் சோர்வுடன் வீடு திரும்பிய பிஜிலா தனது பாட்டியிடம் ஆசிரியை அடித்ததை கூறி உள்ளார். அப்போது பிஜிலாவின் கால்களில் பிரம்பால் அடித்ததால் ஏற்பட்ட வீக்கத்தை பார்த்து கதிஜா அதிர்ச்சி அடைந்தார். அவர் உடனடியாக பிஜிலாவை கரூர் அரசு மருத்துவமனையில் சேர்தார். மேலும் பிஜிலாவை பிரம்பால் அடித்த ஆசிரியை மீது வெங்கமேடு போலீசில் புகார் செய்தார்.

இதற்கிடையே ஆசிரியை மாணவியை அடித்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய பள்ளி நிர்வாகம் அந்த ஆசிரியையை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஓடும் பஸ்சில் 1½ கிலோ நகை மாயம்: உறவினர் வீட்டில் பதுக்கிவிட்டு கொள்ளை நாடகமாடியது அம்பலம்!!
Next post தாராபுரம் போலீசில் நகராட்சி அதிகாரி காதலியுடன் தஞ்சம்!!