சூர்யாவுக்காக வரல.. ஜோதிகாவுக்காக தான் வந்தன்..!!
ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள 36 வயதினிலே படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இயக்குனர் பாலா பேசும்போது, நான் இந்த விழாவுக்கு வந்தது சூர்யாவுக்காக அல்ல. நான் ஜோதிகாவின் ரசிகன். அவருக்காகத்தான் இந்த விழாவுக்கு வந்தேன் என்று பேசினார்.
மேலும், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இயக்குனர் வெங்கட் பிரபு பேசும்போது, ஒரு கணவன் தன்னுடைய மனைவியை ரொம்பவும் சந்தோஷமாக வைத்துக் கொள்வது என்பது ரொம்பவும் கஷ்டமான காரியம். ஆனால், இதில் சூர்யா ரொம்பவும் பெஸ்ட். ஜோதிகாவை ரொம்பவும் சந்தோஷமாக வைத்திருக்கிறார். சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து மீண்டும் ஒரு படத்தில் நடிக்க வேண்டும். இதை ரசிகர்கள் சார்பாக நான் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
இயக்குனர் பாண்டிராஜ் பேசும்போது, இந்த படத்துக்கு முன்னதாகவே என்னுடைய இயக்கத்தில் உருவாகும் ஹைக்கூ படம் தான் 2டி எண்டர்டெயின்ட்மெண்ட் தயாரிக்கும் முதல் படம். ஆனால், இந்த படம் முன்னதாக வெளிவந்துவிட்டது.
என்னுடைய படத்தில் சூர்யா நடித்து வருகிறார். அவருடன் ஜோதிகாவையும் நடிக்க வைக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அது முடியாமல் போய்விட்டது. ஒரு அரை மணி நேரம் வந்தாலும், ஜோதிகாவின் கதாபாத்திரம் பேசும்படியாக இருக்கும்படி ஒரு படம் பண்ணுவேன். தற்போது சூர்யாவுடன் இணைந்து பணியாற்றுவது எனக்குள் ஒரு அதிர்வை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
Average Rating