ஹேர் டிரையருக்குள் தங்க நகைகளை ஒளித்து வைத்துக் கடத்தி வந்த இந்தியப் பயணி கைது!!

Read Time:1 Minute, 30 Second

fd5a8336-b45f-4490-96e8-63eb0310eefa_S_secvpfகொல்கத்தாவின் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று தங்க நகைகளை கடத்திக் கொண்டு வந்த இரு வேறு நபர்களிடமிருந்து, 45 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை விமான நிலைய போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர்.

விமான நிலையத்தில் நேற்று வழக்கமாக நடைபெற்ற சோதனையின் போது, கத்தார் தலைநகர் டோஹாவிலிருந்து கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் வந்த பயணி ஒருவர் கொண்டு வந்த பைகளை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அந்த பயணி போலியாக ஒரு ஹேர் டிரையரை உருவாக்கி, அதற்குள் தங்க நகைகளை வைத்து கடத்திக் கொண்டு வந்திருப்பது தெரிய வந்தது. ஹேர் டிரையரில் மறைத்து வைத்திருந்த 27 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை பறிமுதல் செய்த போலீசார் அவரையும் கைது செய்தனர்.

இதேபோல், பேங்காக்கிலிருந்து வந்த மற்றொரு இந்திய பயணியிடம் இருந்து 17 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை போலீசார் பரிமுதல் செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குஜராத்தில் 9 வயது சிறுமி தற்கொலை!!
Next post பகவத் கீதை போட்டியில் வெற்றி பெற்ற மரியத்தை மராட்டிய கவர்னர் வரவழைத்து பாராட்டி பரிசளித்தார்!!