சிங்கப்பூரில் இருந்து வந்த சென்னைவாசி மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மாரடைப்பால் மரணம்!!
Read Time:1 Minute, 10 Second
சிங்கப்பூரில் இருந்து இன்று சென்னை வந்த விமானத்தில் பயணித்தவர்களில் ஒருவரான கணபதி(52) என்பவர் மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் சோதனையிடும் பகுதியில் காத்திருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாரடைப்பால் உயிர் பிரிந்து விட்டதாக அறிவித்தனர்.
இதனையடுத்து, அவரது பாஸ்போர்ட்டில் உள்ள முகவரியின் அடிப்படையில் வேளச்சேரியில் வசிக்கும் குடும்பத்தாருக்கு தகவல் அளிக்கப்பட்டு, கணபதியின் பிரேதம் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கடந்த வாரம் நியூசிலாந்தில் நீரில் மூழ்கி பலியான இந்திய மாணவர் பலராமன் உடல் இன்று சென்னை வந்து சேர்ந்தது. சென்னை முகப்பேரில் உள்ள அவரது பெற்றோரிடம் பலராமனின் பிரேதம் ஒப்படைக்கப்பட்டது.
Average Rating