வெளிநாட்டில் எம்.பி.பி.எஸ். சீட் வாங்கி தருவதாக ரூ.1 கோடி மோசடி: பட்டதாரி பெண் கைது!!
Read Time:1 Minute, 21 Second
தியாகராய நகர் வைத்திய ராமன் தெருவில் இயங்கி வந்த தனியார் நிறுவனம் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளில் இயங்கி வரும் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., எம்.எஸ். படிப்புக்கு சீட்டு வாங்கி தருவதாக ஆன்லைன் மூலம் விளம்பரம் செய்து இருந்தது. இதனை நம்பி பலர் பணம் கட்டி இருந்தனர். ஆனால் கூறியப்படி மருத்துவ படிப்புக்கான சீட் வாங்கி கொடுக்கவில்லை.
இதுகுறித்து மாம்பலம் போலீசுக்கு பல்வேறு புகார்கள் வந்திருந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட கவுரிவாக்கத்தை சேர்ந்த சுப்ரியாவை கைது செய்தனர். எம்.பி.ஏ. படித்துள்ள அவர் அதிக பணம் சம்பாதிக்க குறுக்கு வழியில் இதில் ஈடுபட்டுள்ளார். சுமார் 1 கோடிக்கு மேல் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. அவரிடம் இருந்து ரூ.40 ஆயிரம் 2 லேப்டாப், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
Average Rating