கண்ணமங்கலத்தில் பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பு பணி!!
Read Time:1 Minute, 3 Second
மேற்கு ஆரணி ஒன்றியத்தில் 37 பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பு பணி கடந்த 8–ந் தேதி முதல் நடந்து வருகிறது.
திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி உத்தரவின்பேரில், வட்டார வளமைய மேற்பார்வையாளர் வேலாயுதம் தலைமையிலான குழுவினர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் ஆசிரியர் பயிற்றுநர்கள், பிளஸ்–2 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு ஆசிரியர்களும் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த வாரத்தில் இருந்து நடந்த கணக்கெடுப்பு பணியில் இதுவரை 15 மாணவர்கள், 10 மாணவிகள் கண்டறியப்பட்டுள்ளதாக கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி கூறினார்.
Average Rating