பலாத்காரம் செய்தவர்களின் பெயரை சரிதாநாயர் என்னிடம் கூறினார்: விசாரணை கமிஷன் முன்பு மாஜிஸ்திரேட்டு சாட்சியம்!!
சோலார் பேனல் மோசடி வழக்கில் சரிதாநாயர் கைது செய்யப்பட்டு அப்போதைய எர்ணாகுளம் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு ராஜு முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, சரிதாநாயர் தனக்கு அரசியல் ரீதியாக மிரட்டல் இருப்பதாகவும், உயிருக்கு ஆபத்து என்றும் மாஜிஸ்திரேட்டிடம் கூறினார்.
மேலும் தன்னை அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறினார். இது தொடர்பாக சரிதாநாயர் கூறிய தகவல்களை அப்போதைய மாஜிஸ்திரேட்டு ராஜு முறையாக பதிவு செய்யவில்லை என்று புகார் கூறப்பட்டது.
இதுபற்றி மாஜிஸ்திரேட்டு ராஜுவிடம் விளக்கம் கேட்டு கேரள ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்பியது. மேலும் சோலார் பேனல் மோசடி வழக்கை விசாரிக்கும் ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜன் தலைமையிலான விசாரணை கமிஷனும் இதுபற்றி கமிஷன் முன்பு ஆஜராகி சாட்சியம் அளிக்கும்படி மாஜிஸ்திரேட்டு ராஜுவுக்கு சம்மன் அனுப்பியது.
மாஜிஸ்திரேட்டு ராஜு நேற்று விசாரணை கமிஷன் முன்பு ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது அவர், சரிதாநாயர் தன்னிடம் கோர்ட்டில் ரகசிய வாக்குமூலம் அளித்தபோது, தன்னை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் பற்றிய விவரத்தை தெரிவித்தார்.
சோலார் பேனல் மோசடி தொடர்பாக விசாரித்த வேளையில் அவர், வழக்கை திசை திருப்பும் வகையில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததுபற்றி கூறியது, வழக்குக்கு தொடர்பில்லாமல் இருந்தது. எனவே நான் அதை பதிவு செய்யவில்லை. சரிதாநாயர் தன்னை சிலர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியது உண்மைதான். அவர் கூறிய பெயர்கள் இப்போது எனக்கு நினைவில் இல்லை. என்னுடன் அவர் 5 நிமிடங்கள் மட்டுமே பேசினார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Average Rating