புதுவையில் கள்ளக்காதலியின் 3 வயது மகளை கற்பழித்த பஸ் டிரைவர்: கால்களை உடைத்து சித்ரவதை!!
புதுவையில் உள்ள ஒரு நூற்பாலையில் பணிபுரிந்து வரும் மானேஜரின் 3 வயது மகள் சுஷ்மிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
இவரது தாய் சுஷ்மிதாவை சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள தாய் வீட்டுக்கு அடிக்கடி அழைத்து செல்வது வழக்கம். அப்படி தனியார் பஸ்சில் மேட்டூருக்கு செல்லும்போது பஸ் டிரைவரான தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரத்தை சேர்ந்த பசுபதி என்ற முனுசாமி (42) என்பவருடன் சுஷ்மிதாவின் தாய்க்கு பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
தனிமையில் சந்தித்து உறவாடும்போது சுஷ்மிதாவையும் அழைத்து செல்வது வழக்கம். சம்பவத்தன்று அதுபோல் சுஷ்மிதாவை அவரது தாய் கள்ளக்காதலனை பார்க்க அழைத்து சென்றார். அப்போது பஸ் டிரைவர் பசுபதி அவரது கள்ளக்காதலி முன்பே சுஷ்மிதாவை கற்பழித்தார். இதற்கு சுஷ்மிதா உடன்படாததால் ஆத்திரமடைந்த பசுபதி இரும்பு கம்பியால் சுஷ்மிதாவின் காலை உடைத்து சித்ரவதை செய்தார்.
மேலும் வயிற்றிலும் எட்டி உதைத்தார். இதில் சுஷ்மிதாவுக்கு பக்கவாதம் ஏற்பட்டது. மேலும் கால்கள் மற்றும் விலா எலும்பும் முறிந்து போனது. உடனடியாக சுஷ்மிதாவை அவரது தாய் தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்.
எப்படியோ இதனை அறிந்த சுஷ்மிதாவின் தந்தை குழந்தையை அங்கிருந்து மீட்டு வந்து புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சுஷ்மிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி அறிந்த புதுவை குழந்தைகள் நலக்குழு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சிறுமி சுஷ்மிதாவிடம் விசாரணை நடத்தியது. பின்னர் இதுபற்றி தர்மபுரி குழந்தைகள் நலக்குழுவுக்கு தகவல் தெரிவித்தது.
இதைத்தொடர்ந்து தர்மபுரி குழந்தைகள் நலக்குழுவினர் இதுகுறித்து பெண்ணாகரம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் பஸ் டிரைவர் பசுபதி மீது கற்பழிப்பு உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
மேலும் சுஷ்மிதாவின் தாய் மீதும் வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவான அவரை தேடி வருகிறார்கள்.
இதுபற்றி பசுபதி போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில், குழந்தை சுஷ்மிதாவை அவரது தாய் கண் முன் பலமுறை கற்பழித்ததாகவும், ஒரு முறை கற்பழித்தபோது அதற்கு சுஷ்மிதா உடன்படாததால் அவரது காலை உடைத்து சித்ரவதை செய்ததாக கூறினார்.
Average Rating