திருவண்ணாமலையில் காதலனுடன் தங்கை மாயமானதால் என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை!!
திருவண்ணாமலை அருகே உள்ள வேங்கிகால் பள்ளத்தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன்கள் பிரேம்குமார் (வயது25), சதீஸ் (20), மகள் சங்கீதா (22).
மூத்தமகன் பிரேம்குமார் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. இறுதி ஆண்டு படித்து வந்தார். சங்கீதா எம்.சி.ஏ. முடித்துவிட்டு வீட்டில் இருந்தார்.
இந்த நிலையில் சங்கீதாவுக்கும் அதே பகுதியில் உள்ள ஜெய்பீம் நகரை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரின் மகன் பரத்துக்கும் (வயது 28) பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாறியது.
இவர்களின் காதல் விவகாரம் இருவீட்டாருக்கும் தெரியவந்தது. இதனால் சங்கீதாவை பெற்றோர் கண்டித்தனர்.
பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், பரத்தும் சங்கீதாவும் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறினர்.
பெற்றோர் பல இடங்களில் தேடியும் மகள் கிடைக்கவில்லை. தங்கை காதலனுடன் ஓடியதால், அவமானம் தாங்க முடியாமல் பிரேம்குமார் மனமுடைந்து காணப்பட்டார். அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சங்கீதாவின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், வேங்கிகால் கிராமத்தில் பதட்டம் நீடிப்பதால் பாதுகாப்பு பணியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Average Rating