விருதுநகரில் பிளஸ்–2 மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தம்: சமூக நல அதிகாரிகள் நடவடிக்கை!!
Read Time:59 Second
விருதுநகர் டி.குமாரலிங்காபுரத்தைச் சேர்ந்த 17 வயதுடைய பிளஸ்–2 மாணவி ஒருவருக்கும், காரியாபட்டியை சேர்ந்த செந்தில்குமார் (வயது 25) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவர்களது திருமணம் நேற்று நடைபெறுவதாக இருந்தது.
இந்த சூழலில் பெண்ணுக்கு திருமண வயது எட்டப்படவில்லை என்ற தகவல் சமூக நல அதிகாரிகளுக்கு கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் போலீசார் விரைந்து சென்று மாணவியின் பெற்றோரிடம் பேசினர். இதனை தொடர்ந்து திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
மாணவிக்கு திருமண வயது எட்டப்படாததால், அவர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
Average Rating