தென்காசி அருகே கல்லூரி மாணவி மர்மச்சாவு!!
தென்காசி அருகே உள்ள மேலமெஞ்ஞானபுரம் ஆர்.சி. கோவில் தெருவை சேர்ந்தவர் பாபு. இவரது மகள் நந்தினி (வயது 19). இவர் குற்றாலம் கல்லூரியில் படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று நந்தினி வீட்டிற்குள் இருந்து கரும்புகை வெளியேறியது. மேலும் அவரது வீட்டின் முன்பக்க கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் வீட்டின் ஜன்னலை திறந்து பார்த்தனர். அப்போது உள்ளே நந்தினி உடல் கருகிய நிலையில் இறந்துகிடந்தார்.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் குற்றாலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்வையிட்டனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நந்தினி எப்படி இறந்தார் என்று தெரியவில்லை. தீக்குளித்து தற்கொலை செய்தாரா அல்லது யாராவது எரித்து கொலை செய்தனரா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கல்லூரி மாணவி மர்மமான முறையில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating