நாகர்கோவிலில் கடத்தப்பட்ட சிறுமி, பிச்சை எடுக்கும் கும்பலிடம் விற்பனையா? போலீசார் விசாரணை!!
மதுரை பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி கலைச் செல்வி (வயது 28).
இவர்களுக்கு சிவலெட்சுமி (12), சிவரஞ்சனி என 2 மகள்கள் உள்ளனர். தற்போது கலைச்செல்வி நாகர்கோவில் ரெயில்வே ரோட்டில் வசித்து வந்தார்.
இவர் வசித்து வந்த பகுதியில் நெல்லை மாவட்டம் ஆலங்குளம் பண்டாரத்தைச் சேர்ந்த மாயாண்டி (37) என்பவரும் குடியிருந்து வந்தார்.
கடந்த 6–ந்தேதி மாயாண்டி, கலைச்செல்வியின் மகள் சிவலெட்சுமியை அழைத்துக் கொண்டு சென்றார். அதன் பிறகு அவர்கள் திரும்பி வரவில்லை. இந்த நிலையில் நேற்று மாலை மாயாண்டி நாகர்கோவில் ரெயில் நிலையம் பகுதியில் நின்று கொண்டிருப்பதாக கலைச்செல்விக்கு தகவல் கிடைத்தது.
அங்கு விரைந்து சென்ற கலைச்செல்வி, மாயாண்டியிடம் தனது மகள் சிவலெட்சுமியை எங்கே? என்று கேட்டு தகராறு செய்தார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இருவரும் மாறி மாறி சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.
இதைப்பார்த்துக் கொண்டிருந்த அந்த பகுதி மக்கள் மாயாண்டியை பிடித்தனர். பின்னர் கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். கோட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று பொதுமக்கள் பிடியில் இருந்த மாயாண்டியை மீட்டு கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
அவரிடம் போலீசார் சிவலெட்சுமியை எங்கு அழைத்துச் சென்றாய்? என்று கேட்டனர். அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்தார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது சிவலெட்சுமியை கலைச்செல்வி தன்னுடன் பிச்சை எடுக்க அனுப்பி வைத்ததாகவும், நானும், சிவலெட்சுமியும் ரெயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தபோது, ரெயில்வே போலீசார் என்னை பிடித்தனர். பணகுடி பகுதியில் என்னை இறக்கி விட்டு விட்டனர். சிவலெட்சுமி ரெயிலில் இருந்து இறங்கவில்லை. அவரை பற்றி எனக்கு தெரியாது என்று கூறினார்.
மாயாண்டி கூறுவது உண்மைதானா? சிறுமி சிவலெட்சுமியை பிச்சை எடுக்கும் கும்பலிடம் விற்றாரா? என்பது பற்றி போலீசார் விசாரிக்கிறார்கள்.
இதற்கிடையே கலைச்செல்வியின் இன்னொரு மகளான சிவரஞ்சனியை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating