பாடசாலை காணியில் மாணவன் சடலமாக மீட்பு!!
Read Time:44 Second
உடவலவ – மிரிஸ்வெல்பொத்த பாடசாலைக்கு அருகில் உள்ள காணியில் இருந்து மாணவன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் இன்று (15) காலை மீட்கப்பட்டதாக உடவலவ பொலிஸார் தெரிவித்தனர்.
11ம் தரத்தில் கல்வி பயிலும் 17 வயது மதிக்கத்தக்க மாணவனின் சடலமே வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது.
மாணவன் நேற்று முதல் காணாமல் போனதாக பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
Average Rating